கல்யாணத்துக்கு பிறகும் கிசுகிசு! மீனா வருத்தம்!!

Actress Meena Interview about Kisukisu
நடிகை மீனாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக சமீபத்தில் வதந்தி பரவியது. திருமணத்துக்கு பிறகு மீனா நடிப்பது கணவர் வித்யாசாகர் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அவற்றை‌யெல்லாம் மறுத்து நடிகை மீனா பேட்டியளித்துள்ளார். அதில், நான் என் கணவருடன் பெங்களூருவில் சந்தோஷமாக இருக்கிறேன். என்னைப் பற்றியும், என் திருமண வாழ்க்கை பற்றியும் வேண்டுமென்றே சிலர் வதந்தியை பரப்புகிறார்கள். எனக்கும், என் கணவருக்கும் திருமண பேச்சுவார்த்தை நடந்தபோதே, நான் சினிமாவில் நடிப்பது பற்றி எந்தவித கரு்ததும் பரிமாறப்படவில்லை. நான் நடிக்க வேண்டும் என்றோ... நடிக்ககூடாது என்றோ... என் கணவர் வீட்டில் நிபந்தனை எதுவம் விதிக்கவில்லை, என்று கூறியுள்ளார்.

கல்யாணத்துக்கு முன்புதான் நான் சினிமாவில் பிஸியாக இருந்தபோது சிலர் கிசுகிசு பரப்பினார்கள். இப்போது கல்யாணத்துக்கு பிறகும் அதை தொடர்வது நியாயமா? சினிமா மூலம் நம்மையெல்லாம் சந்தோஷப்படுத்திய ஒரு பெண், திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே மனிதநேயம். அதை புரிந்து கொண்டு இனிமேலாவது என்னைப் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம். திருமணத்துக்கு பிறகு நான் அதிக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே ‌தேர்வு செய்து நடித்து வருகிறேன். எனக்கு நிறைய படவாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. தற்போது தமிழில் ஒரு படமும், கன்னடத்தில் ஒரு படமும் நடித்து வருகிறேன். வதந்திக்கு பயந்து நடிப்பதை நிறுத்த மாட்டேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன், என்று நடிகை மீனா கூறியிருக்கிறார்.

0 Response to "கல்யாணத்துக்கு பிறகும் கிசுகிசு! மீனா வருத்தம்!!"

Post a Comment